இலங்கையில் இன்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்!


இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக மேலும் 643 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதில் 575 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .


ஏனைய 68 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,480 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,121 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 9,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்றால் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24,867 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 709 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.