தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த செயற்பாட்டுக்குத் தேவையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
$ads={2}
அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இணைந்து இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.