முதலாவது சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார் வியாஸ்காந்த்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலாவது சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார் வியாஸ்காந்த்!


சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் விஜயகாந்த்.


தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார் யாழ் வீரன் வியாஸ்காந்த். கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூசை அவர் வீழ்த்தினார்.


யாழ் மத்திய கல்லூரியின் வீரரான வியாஸ்காந்த், இன்று ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஆடும் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.


லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்காக தெரிவான வியாஸ்காந்த், அந்த அணி ஆடிய முதல் 04 ஆட்டங்களிலும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் தமிழ் இரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியடைந்த நிலையில் காணப்பட்டனர். 


இந்நிலையில், கொழும்பு கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டார்.


சுழற்பந்து வீச்சாளரான விஜாஸ்காந்த் இன்று ஆட்டமிழக்காமல் 03 ஓட்டங்களை பெற்றார்.


$ads={2}


முதலில் ஆடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கொழும்பு கிங்ஸ் அணி தற்போது 16.0 ஓவரில் 03 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.