பண்டிகைகள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவூட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டிகைகள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவூட்டல்!

மக்களனைவரும் பண்டிகைகளை தமது குடும்பத்தாருடன் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இம்மாதம் பண்டிகை காலம் என்ற போதிலும் கொவிட் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் போதும், கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்யும் போதும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். எனினும் வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாததால் பொதுமக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே சுகாதார விதிகளை கடைப்பிடித்து பண்டிகைகளை கொண்டாடுவது பாதுகாப்பானது.


$ads={2}

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கமைய இதுவரையில் 1,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.