கடவுள் இல்லை! கடவுள் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது! -ஒமல்பே சோபித தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுள் இல்லை! கடவுள் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது! -ஒமல்பே சோபித தேரர்

கடவுள் இல்லை எனவும், கடவுள் இருந்தால் இப்படி ஒர் அனர்த்தம் ஏற்படுமா எனவும் தேசிய சங்க புத்திஜீவிகள் சங்கத்தின் உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளோ அல்லது பேயோ இருந்திருந்தால் கொரொனாவினால் மனித குலம் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவிலிருந்து அவர்களினால் எம்மை மீட்டிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் கடுந்தொனியில் பேசும் காணொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

$ads={2}

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காளி அம்மா, கதிர்காமக்கடவுள், விஷ்னு, பத்தினி அம்மா உள்ளிட்ட கடவுளர் இருந்திருந்தால் கொரோனாவினால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு புத்திஜீவியும் காளி அம்மாவின் மருந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மருத்துவம் குறித்த மிகுந்த நம்பிக்கை உண்டு என்ற போதிலும் இந்த மாதிரி காளி அம்மா போன்ற பிரச்சாரங்களினால் இந்த பானி மருந்து குறித்த நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.