வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உடுவில், கோப்பாய், பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட நாட்டில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை குறிப்பிட்டு வரைபடம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (26) வெளியிட்டுள்ளது.
பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் எடுக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்கள் டிசம்பர் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ளன.
Original Image: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/moh_area_map_33.jpg