சுகாதாரத்துறையினரின் அறிவுரைக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதாரத்துறையினரின் அறிவுரைக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது!

கொரோனா தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

கொரோனா தொற்றாளர்களின் இறுதியாத்திரைக் கூட சுகாதாரத்துறையினரின் அறிவுரைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


எனவே அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கே மேற்கொள்ளப்படுவதை, கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் உணரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொரோனா பரவல் விடயத்தில் அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.