நாளை தனிமைப்படுத்தல் அமுல் மற்றும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை தனிமைப்படுத்தல் அமுல் மற்றும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக வெளியான செய்தி!


கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (07) காலை 5 மணியுடன் சில பொலிஸ் பிரிவுகளும் கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொழும்பில் நாளை காலை 5 மணி முதல் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்திலும் சில பகுதிகளும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள் - புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயபுர கிராம சேவகர் பிரிவு என்பன நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.


கொழும்பில் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆதுருப்பு வீதி, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனிவீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல கிராம சேவகர் பிரிவும் லக்சத வீடமைப்பு திட்டம் , மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் ஃபர்கசன் வீதியின் தெற்கு பகுதி (South of Ferguson Road) என்பன  தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.


கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூணுபிட்டி கிராம சேவகர் பிரிவு, கருவாத்தோட்டம் (குருந்துவத்த) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60 ஆவது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோகிலா வீதி என்பன நாளை காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


களனி பொலிஸ் பிரிவு முழுமையாக தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் அதே வேளை , வத்தளை, பேலியகொடை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் சில கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.


வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலபிட்டி, ஹேகித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவர்கர் பிரிவுகள் நாளை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.


பேலியகொடைவத்தை, பேலியகொட கஹபட, மீகஹாவத்தை மற்றும் பட்டிய – வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இந்த பொலிஸ் பிரிவில் ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.


கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் வெலேகொட – வடக்கு கிராம சேவகர் பிரிவு மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. 


இவை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நாட்டில் தற்போதைய நிலைவரப்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,877 அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 649 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதேநேரம், 7,280 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 461 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 20,460 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். 


மேலும் நாட்டில் 140 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.