லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது.
கோள் க்லேடியேற்றர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணிகள் போட்டியில் மோதவுள்ளன.
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமானது. கழம்பு கிங்ஸ் , கோள் க்லேடியேற்றர்ஸ், தம்புள்ள வைக்கிங், கண்டி டஸ்கர்கஸ், மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் இத்தொடரில் விளையாடின.
வெற்றிகரமான 20 முதல் சுற்று போட்டிகள் மற்றும் இரு அரையிறுதி போட்டிகளின் பின்னரே இன்று இரவு 7 மணிக்கு மாபெரும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
முதலாவது அரையிறுதியில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்திய, பானுக்க ராஜபக்ஷ தலைமையில் கோள் க்லேடியேற்றர்ஸ் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணியை வீழ்த்திய திசரபெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இன்று களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.