அரசியல் இலாபத்துக்காக மத பதற்றத்தை அதிகரிக்க ஜனாஸா எரிப்பு விவகாரத்தை பயன்படுத்துகின்றனர்! நாரம்பனாவே ஆனந்த தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியல் இலாபத்துக்காக மத பதற்றத்தை அதிகரிக்க ஜனாஸா எரிப்பு விவகாரத்தை பயன்படுத்துகின்றனர்! நாரம்பனாவே ஆனந்த தேரர்


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர் என அஸ்கிரிய பீடத்தின் பிரதிபதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதன் மூலம் சில அரசியல்வாதிகள் தனிப்பட்ட அரசியல் இலாபத்தினை அடைவதற்கு முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்ன செய்வது என்பது தற்போது தீர்வு காணமுடியாத புதிராக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது காணப்படும் நிலவரத்தின் மத்தியில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பிரிவினைகளை உருவாக்காமல் சட்டத்தினை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள அவர் எந்த சக்திக்கும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணியாமல் ஒரேநாடு ஒரே சட்டம் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணத்தில் மத பதற்றத்தினை அதிகரிப்பதற்கு இந்த விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.