மொறட்டுவை விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணித் தாய்க்கு கருச்சிதைவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொறட்டுவை விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணித் தாய்க்கு கருச்சிதைவு!


மொறட்டுவை எகொடஉயனவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 23 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.


குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன பகுதியில் பொறுப்பற்ற ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் ஏற்படுத்தப்பட்ட இப்பயங்கர விபத்தில் குறித்த பெண்ணின் 1 வயது, 7 வயதான இரு பெண் பிள்ளைகள் உயிரிழந்திருந்தனர்.


விபத்தையடுத்து 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இளைஞரை எதிர்வரும் டிசம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.