திரை அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திரை அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி!

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் திரை அரங்குகளை மீண்டும் திறக்க புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் திரை அரங்குகளை திறப்பது குறித்து உறுதி செய்யுமாறு திரையரங்க உரிமையாளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.


$ads={2}

அந்தவகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள், 2021 ஜனவரி 1 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற கலைஞர்களுடன் இடம்பெற்ற சமீபத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.