நாட்டின் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சுகாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துளார்.

மேலும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து நாட்டில் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டை பாதுகாப்பதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தமையை இந்த இடத்தில் நினைவு கூறவேண்டுமெனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதன்படி, எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புது வருடப் பிறப்பு ஆகியவற்றின் போதும், பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக்காலத்தை அடிப்படையாக கொண்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.