கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மாலைத்தீவு அரசாங்கத்தினால் தீவு ஒன்றினை வழங்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மாலைத்தீவு அரசாங்கத்தினால் தீவு ஒன்றினை வழங்க தீர்மானம்!

கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை புதைப்பது குறித்து மாலைதீவு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுகாதார சாத்தியப்பாடுகளை ஆராயுமாறு சுகாதார அமைச்சுக்கு இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சுக்கு வலியுறுத்தியுள்ளது.

மாலைதீவிலுள்ள தீவொன்றில் சடலங்களை புதைப்பதற்கு இடம் வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.


$ads={2}

இது தொடர்பில் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் பதிலளிப்பதற்கான அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு தயாரித்து வருவதாக வௌியுறவுத்துறை அமைச்சு கூறுகின்றது.

அத்துடன் நீர் மட்டம் குறைந்த வரண்ட நிலப்பரப்பொன்றை கண்டறியுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கை தொடர்பில் நிபுணர்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக வௌ்ளைத் துணிகளை கட்டி பொரளை பொது மயானத்திற்கு அருகில் பலர் எதிர்ப்பினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை டேலி மிரர் நாளிதழும் இன்று செய்து வெளியிட்டுருந்தது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.