மேலும் மேலும் நீடிக்கும்! பொலிஸ் பேச்சாளரின் அதிரடி எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் மேலும் நீடிக்கும்! பொலிஸ் பேச்சாளரின் அதிரடி எச்சரிக்கை!


சுகாதார வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பில் இருக்கும் 09 பொலிஸ் பிரிவுகளிலும் 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியே செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு எவராவது வெளியே சென்றால் தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் – PCR சோதனைக்காக மாதிரிகளை வழங்குமாறு கேட்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் சுகாதார வழிமுறைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தாதீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுமக்கள் விதிமுறைகளை உரிய விதத்தில் பின்பற்றினால் கூடிய விரைவில் குறிப்பிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படும் என தெரிவித்துள்ள அஜித் ரோஹன பொதுமக்கள் அவற்றை கடைப்பிடிக்க மறுத்தால் தனிமைப்படுத்தலை மேலும் மேலும் நீடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அஜித் ரோஹன அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.