பாடசாலைகள் அருகில் அதிக வாகன நெரிசல்களுக்கான தீர்வு! - அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகள் அருகில் அதிக வாகன நெரிசல்களுக்கான தீர்வு! - அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ

பாடசாலைகளுக்கு அருகே மாணவர்கள் வீதியை கடப்பதால் கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பெரிய நகரத்திலும் நுழைவாயிலின் இரு புறங்களிலும் பாடசாலைகள் இருப்பதோடு, சுரங்கப்பாதைகள் அல்லது சிறிய மேம்பாலங்களை (ஃப்ளைஓவர்கள்) நிர்மாணித்து பாடசாலை மாணவர்கள் வீதியை கடக்க அனுமதிப்பதன் மூலம் பாடசாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.


$ads={2}

ஆனால் இப்போது நடப்பது என்னவென்றால், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீதியை பாதசாரிகள் கடவையிலேயே கடக்கிறார்கள்.

இதன் காரணமாக, கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் பாடசாலையின் காலை நேரத்திலும், பாடசாலை முடியும் நேரத்திலும் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக அமைச்சர் கூறினார்.

சுரங்கங்கப்பாதைகள் மற்றும் சிறிய மேம்பாலம் மூலம் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது நெடுஞ்சாலை அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.