கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தின் (Online) ஊடாக பெறும் காலத்தை நீடித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை தகவலைப் பெறும் காலத்தை கல்வியமைச்சு நீடித்துள்ளது.


$ads={2}

மேலும், கல்வி அமைச்சின் வலைத்தளமான www.ncoe.moe.gov.lk க்குள் உள்நுழைவதன் ஊடாக பயிற்சியாளர்கள் தங்கள் தகவல்களை உள்ளிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 மற்றும் 2018 ஆண்டுகளில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்களுக்கான தகவல்களை இணையத்தளத்தில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.