
ஊடகங்களிடம் உரையாற்றிய அச்சங்கத்தின் ஆசிரியர் மருத்துவர் ஹரித அலுத்கே, முன்னைய சந்தர்ப்பங்களில் கூட அட்டலுகம கிராம மக்கள் பிசிஆர் சோதனைகளை நடத்த ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இது போன்ற சூழ்நிலையில் இப்பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்குவது சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பானதல்ல என அவர் கூறினார்.
$ads={2}
சுகாதார சேவைகள் தங்கள் உதவியை வழங்க மறுத்தால் அட்டலுகமவிலுள்ள மக்கள் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக இறப்பர்.
இதேவேளை பொதுச் சுகாதார அதிகாரி ஒரு தொற்றாளரை சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்கு அங்கு சென்ற போது அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இவ்வாறான நபர்கள் மீது பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பர் என்றும் அவர் கூறினார்.