கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மாத்தறை பொது மருத்துவமனையின் கண் நோய்ப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பிரியங்க இத்தவெல இதனைத் தெரிவித்துள்ளார்.


$ads={2}

கொரோனா தொற்றுநோய் காரணமாக இணையம் ஊடாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதால், பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது மாணவர்கள் சிகிச்சைகளுக்காக வருகை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வாந்தி, தலைச்சுற்றல், கண் வலி மற்றும் கண்ணீர் போன்ற அறிகுறிகளைக் கொண்ட மாணவர்களே அதிகம் சிகிச்சைகளுக்காக தன்னிடம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணினி அல்லது தொலைபேசியின் திரையினை தொடர்ந்து பார்க்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும் எனவும், ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
0Shares

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.