கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி – தொண்டமான் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த மாதம் 23ஆம் திகதி கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவருடன் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நவம்பர் 24ஆம் திகதி முதல் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தரம் 06 தொடக்கம் 13 வரையான மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.