ஆயுர்வேத கொரோனா தடுப்பு மருந்தினை சுவைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆயுர்வேத கொரோனா தடுப்பு மருந்தினை சுவைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தினை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (10) வழங்கப்பட்டுள்ளது.

கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார இன்று குறித்த மருந்தினை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆயுர்வேத மருந்தினை அருந்தியுள்ளனர்.

மேலும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட பல அமைச்சர்கள் குறித்த ஆயுர்வேத மருந்தினை பருகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

$ads={2}

அத்துடன், தனது மருந்தின் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டாரவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கடந்த நாட்களில் பெருமளவு மக்கள் கேகாலைப் பிரதேசத்தில் கூடியிருந்தனர்.

எனினும் சுகாதார விதிமுறைகள் காரணமாக தற்போது குறித்த மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.