இடம்பெற்றுவரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பில் ஜோன்சன் சார்லஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அவிஸ்க பெர்ணான்டோ 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மலிந்த புஷ்பகுமார 02 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
அதன்படி, 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். திக்வெல்ல 28 ஓட்டங்கள், ஆர்.மெந்திஸ் 26 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் ஹசரங்க 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மற்றும் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன குறிப்பிடத்தக்கது.