முல்லைத்தீவு மீனவர் போராட்டத்திற்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முல்லைத்தீவு மீனவர் போராட்டத்திற்கு தடை!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்களால் இன்று (15.12.2020 )போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.


$ads={2}

குறித்த போராட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் தகரப் பந்தல் அமைப்பதற்கு முயற்சித்த போது, அங்குவந்த முல்லைத்தீவுப் பொலிஸார் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் பந்தல் அமைப்பதற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் அனுமதியை மீனவர்கள் நாடியுள்ளனர். மேலும், போராட்ட இடத்தில் தற்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர் மீனவர்களுடன் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.