சிறைக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்து ஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.