தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு பக்க விளைவு; ஃபைசர் வேலை செய்ய அதிக நேரம் தேவை என நிபுணர் ஒருவர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு பக்க விளைவு; ஃபைசர் வேலை செய்ய அதிக நேரம் தேவை என நிபுணர் ஒருவர் தெரிவிப்பு!


ஃபைசர் தடுப்பூசி பெற்ற ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்கா - கலிபோர்னியாவில் உள்ள ஒரு செவிலியர் கொரோனாவுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நேர்மறையானதாக ஏபிசி நியூஸ் இணை நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது, ஆனால் குறித்த தடுப்பூசி வேலை செய்து உடலுக்கு பாதுகாப்பை உருவாக்க அதிக நேரம் தேவை என மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அதேநேரம், இரண்டு வெவ்வேறு உள்ளூர் மருத்துவமனைகளில் செவிலியரான கடமையாற்றும் மத்தேயு W எனும் 45 வயது ஆணொருவர் ஏபிசி நியூஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், தனக்கு ஃபைசர் தடுப்பூசி கடந்த டிசம்பர் 18ஆம் திகதி போடப்பட்டதாகவும், தனது கையில் ஒரு நாள் வரை ஒருவித வலி இருந்ததாகவும், ஆனால் வேறு எந்த பக்க விளைவோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என்றும் கூறினார். 


ஆறு நாட்களுக்குப் பின்னர், அவர் கொரோனா பிரிவில் ஒரு ஷிப்ட் வேலை செய்த பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டார் என்று அறிக்கை கூறியுள்ளது. மேலும் அவரின் உடல் குளிர்ச்சியடைந்து, பின்னர் தசை வலி மற்றும் சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.