வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலம் குறைக்கப்பட்டது! இராணுவத் தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலம் குறைக்கப்பட்டது! இராணுவத் தளபதி

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலம் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தும் காலம் 28 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்படவுள்ளதாக, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பான அறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (10) வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

$ads={2}

இந்நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், வீடுகளிலும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

எனினும், தற்போதைய புதிய தீர்மானத்தின் பிரகாரம், 14 நாட்களின் பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின், வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டிய தேவை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.