கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர் நிலநடுக்கம்; ஆராய நிபுணர் குழு நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர் நிலநடுக்கம்; ஆராய நிபுணர் குழு நியமனம்!

கண்டி மாவட்டத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற நிலநடுக்கம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நிபுணர் குழு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கமைய 11 பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு புவிச்சரிதவியல் மற்றும் கட்டிடச் சுரங்கத் திணைக்களத்தின் தலைவர் அநுர வல்பொல தலைமை வகிக்கின்றார்.

$ads={2}

கடந்த 7 தடவையாக கண்டி – திகன, அம்பாக்கோட்டை, அளுத்வத்த, ஹாரகம உட்பட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி இந்த குழு ஆய்வுகளை நடத்தவுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, எதிர்வரும் நாட்களில் அவற்றைக் கொண்டு எடுக்கவுள்ள நடவடிக்கை என்பவற்றை இந்த நிபுணர் குழுவே அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.