குழந்தையை தகனம் செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தையை தகனம் செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் கட்டாய தகனங்களுக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன் நேற்று (12) போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் போது ஏராளமானோர் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே கூடி பதாதைகளை ஏந்தி போராடினர்.

கொழும்பில் அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டவர்களில் 20 நாள் குழந்தையின் படங்களையும் போராட்டக்காரர்கள் இதன்போது காட்சிப்படுத்தியிருந்தனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகனங்களை கட்டாயப்படுத்த இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து அக்கறை இருப்பதாக பிரித்தானியா அரசு முன்தாக கூறியிருந்தது.

மேலும் இது இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பிற நம்பிக்கை சமூகங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பிட்ட தாக்கத்தை அங்கீகரிக்கிறது.

தெற்காசிய இராஜாங்க அமைச்சரும், மனித உரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சருமான அஹ்மத், இது குறித்து நேரடியாக இலங்கை உயர் ஸ்தானிகரிடம் கவலை தெரிவித்துள்ளார்.

$ads={2}

அனைத்து மதக் குழுக்களும் தங்கள் சடங்குகளை கடைபிடிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, எவ்வாறு பாதுகாப்பான வடிவத்தில் தொடர்ந்து இயங்க முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொண்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.