கண்டி - கம்பளை முடக்கம்? - நகராதிபதி விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - கம்பளை முடக்கம்? - நகராதிபதி விளக்கம்!


கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பிரதேசம் முடக்கப்படுமா என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.


இது தொடர்பில் சக செய்தி ஒன்றிற்கு கம்பளை நகராதிபதி சமந்த அருன குமார அவர்களிடம் வினவியபோது கம்பளை பிரதேசத்தை முடக்க இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.


மேலும் கம்பளை பிரதேசத்தில் சுமார் 600 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை கம்பளை நகரில் கோழிக்கடைகளில் தொழில் செய்யும் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட போது சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாவும் தெரிவித்தார்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள், கோழிக்கடைக்கு வந்து சென்றவர்கள் என விசாரணை செய்யும் போது அது பெரிய வலையமைப்பாக உள்ளதாகவும், முடியுமானவரை அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


அத்துடன் உருவாக்கியுள்ள கோழிக்கடை கொத்தணியானது இன்னும் கம்பளை பிரதேசத்தில் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் கம்பளை பிரதேசத்தில் சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றுவதாக இல்லை என இன்றும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும், இந்நிலை தொடருமானால் பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.