கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை! -வைத்தியர் அசேல குணவர்தன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை! -வைத்தியர் அசேல குணவர்தன


கொரோனா தொற்று ஏற்பட்டு மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (29) பகல் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோது அவர் இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.


$ads={2}


கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களை புதைப்பதற்கான எந்த தீர்மானத்தையும் இதுவரை சுகாதார அமைச்சு எடுக்கவில்லை. அவ்வாறான உடல்களை எரிப்பதாக கடந்த மார்ச் மாதமே தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தற்சமயம் கலந்துரையாடி வருகிறது. ஏதேனும் மாற்றுத் திட்டங்கள் இருந்தால் பொதுமக்களுக்கு அறிவிப்போம். அதுவரை உடல்கள் எரிக்கப்படுவதே அரசாங்கத்தின் செல்லுபடியான தீர்மானமாகும் என்று அவர் கூறினார்.


இதற்கிடையில், கொரோனா வைரஸால் இறக்கும் மக்களின் சடலங்கள் குறித்து ஒரு முடிவை சுகாதாரத் துறையினரும், அனைத்து மதம் சார்ந்தவர்களும் அரசியல் தலையீடு இல்லாமல் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.