சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது!


சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யபப்ட்டுள்ளார்.


சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 09 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டது. இதனையடுத்து கடந்த 06 நாட்களாக பொலிஸார் சித்ரா, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.


$ads={2}


சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் குடும்பத்தினர் என பலரிடமும் பொலிஸார் துருவி துருவி விசாரணை செய்தனர். மகளின் தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத் காரணம் என சித்ராவின் தாயார் திட்டவட்டமாக தெரிவித்தும் வந்தார்.


இந்த வழக்கில் RDO விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் திங்கள்கிழமை இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.