இலங்கை தோல்வியடைந்த நாடு என சஜித் தெரிவிப்பு; அவையில் குழப்பநிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தோல்வியடைந்த நாடு என சஜித் தெரிவிப்பு; அவையில் குழப்பநிலை!


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் முயன்றதால் நாடாளுமன்றத்தில் குழப்பநிலை நிலவியது.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) ஆற்றிய உரையின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நாடு என குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து சபாநாயகர் அதனை நீக்குவதற்கு முயன்றார்.

இதன் காரணமாக அவையில் குழப்பநிலையேற்பட்டது.

நாட்டிற்கான தனது கடமையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது, என்பதை இந்தஅவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன் என குறிப்பிட்டிருந்த சஜித் பிரேமதாச நாட்டின் இரண்டாவது மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்த புள்ளிவிபரங்களை நாட்டிற்கு நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர் இலங்கை தோல்வியடைந்த நாடு என நீங்கள் தெரிவித்திருப்பது தவறு ஆகவே உங்கள் உரையிலிருந்து இதனை அகற்ற அனுமதியுங்கள் என கோரினார்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் தான் ஒருபோதும் தான் ஒருபோதும் இலங்கை தோல்வியடைந்த நாடு என குறிப்பிடவில்லை என தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் தோல்வியடைந்த திறமையற்ற செயற்பாடுகளையே குறிப்பிட்டேன் என தெரிவித்தார்.

$ads={2}

தோல்வியடைந்த நாடு என நான் குறிப்பிடவில்லை, இதனை நான் வலியுறுத்துகின்றேன், எனக்கு எனது ஆங்கிலம் தெரியும், என மொழியாற்றலுக்கு மதிப்பளியுங்கள், நான் தோல்வியடைந்த நாடு என ஒருபோதும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.