தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரவுள்ளோம்! -விமல் வீரவன்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரவுள்ளோம்! -விமல் வீரவன்ச


வடக்கு கிழக்கில் பிரதான தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களுக்கான முழுமையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முறையான சூழலியல் ஆய்வுகளை செய்தும், சுற்றுச்சூழல் நிலைமைகளை கருத்தில் கொண்டும் அதற்கு ஏற்றால் போல் இரசாயன வலயம் உருவாக்கப்படும். இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து பல காரணிகளை எம்.பி ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தமையை நான் முழுமையாக வரவேற்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலர் வாய்களில் இருந்து இவ்வாறு மக்களின் உண்மையான பிரச்சினைகள் வெளிவராது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளில் விருப்பம் காட்டுவதாக தெரிவித்தார்.

அவ்வாறான முதலீட்டாளர்கள் இருந்தால் எம்முடன் தொடர்புபடுத்திவிடுமாறு ஸ்ரீதரனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்.

தேசிய தொழிற்சாலைகளை பலப்படுத்த அரசாங்கம் துரிதமாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. புதிய தொழில் பேட்டைகளை உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். ஏறாவூர் பகுதியில் துணி தொழிற்சாலையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக இந்த பகுதிகளில் வாழ்கின்றனர். ஆகவே ஐந்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு கொடுக்க முடியும். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கவுள்ளோம்.

$ads={2}

இதுவும் அப்பகுதி மக்களுக்கான வலமாக மாற்றுவோம். சகல அடிப்படை வசதிகளையும் வழங்குவோம். தொழிற்சாலை கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.