இனி பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் என அழைக்க மாட்டேன்! நீங்கள் பீல்ட் மார்ஷல் இல்லை அதிகம் நார்களை உடைய தேங்காய் மார்ஷல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் என அழைக்க மாட்டேன்! நீங்கள் பீல்ட் மார்ஷல் இல்லை அதிகம் நார்களை உடைய தேங்காய் மார்ஷல்!

முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவை 
இனி பீல்ட் மார்ஷல் என அழைக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றில் நேற்று (09) தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்தவின் நாடாளுமன்ற உரையின் போது இடையில் தனது கருத்தை சரத் பொன்சேகா வெளியிட்டிருந்தார்.

“இனி சரத் பொன்சேகாவை நான் பீல்ட் மார்ஷல் என விளிக்கப் போவதில்லை, மார்ஷல் என அழைப்பதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன் என மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் பீல்ட் மார்ஷல் இல்லை அதிகம் நார்களை உடைய தேங்காய் மார்ஷல்” என சரத் பொன்சேகாவை அவர் ஏளனம் செய்திருந்தார்.

மார்ஷல் என்ற தகுதியிருந்திருந்தால் ரணில் விக்ரமசிங்க செய்த ஏதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக சரத் பொன்சேகா குரல் கொடுத்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

$ads={2}

மாறாக ரணிலின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆமோதித்து இன்று அவரை குறை கூறுவதில் எவ்வித அர்த்தங்களும் கிடையாது என அவர் குறிபிப்பிட்டுள்ளார்.

இந்த பீல்ட் மார்ஷல் பதவியை ஒரு சிறியவனுக்கு வழங்குங்கள் அதுவே பொருத்தமானது” என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.