மூதூர் பொலிஸ் நிலையத்தில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மூதுர் பொலிஸ் நிலையத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மூதூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்தாலும், சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, தற்காலிகமாக மூதூர் பொலிஸ் நிலையமத்திற்கு எதிரே உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக கட்டிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் டி.ஐ.ஜி லயனல் குணதிலக்க அவர்கள் தெரிவித்தார்கள்.
$ads={2}
பொலிஸ் அதிகாரிகள் 38 பேர்கள் திருகோணமலையில் ஒரு தனி இடத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 23 பேர் அரணகன்வில பொலிஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.