புகைப்பிடித்தல், மதுபான பழக்கமுடையோரை எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகைப்பிடித்தல், மதுபான பழக்கமுடையோரை எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புகைபிடித்தல் மற்றும் மதுபான பழக்கம் உடையவர்களுக்கு இலகுவாக கொரொனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பும் அதிகமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் தற்போது அட்டுலுகம பிரதேசம் மிகுந்த அபாயமுடையதாகக் காணப்படுவதாகவும் எனவே இந்த பிரதேசம் தொடர்பில் துரிதமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் இதுவரையில் கிராமம் ஒன்றில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை அட்டுலுகம பிரதேசத்திலாகும். அதற்கமையவே சுமார் 20,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த பகுதியில் கூடிய எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இங்கு மேலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரதேசத்தில் முறையாக கண்காணித்து சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

$ads={2}

தற்போதுள்ள நிலைமையில் மக்கள் தமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானதாகும். முறையான தூக்கம், அதிகளவு நீர் பருகுதல் மற்றும் தேசிய உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளல் என்பனவே இதற்கான வழிமுறைகளாகும்.

குறிப்பாக மதுபானம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும். காரணம் சாதாரணமானவர்களை விட மதுபானம், புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். 

எனவே இந்த பழக்கங்களையும் இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கோருகிறோம் என்றார்.

-எம். மனோசித்ரா

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.