பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு புதிய வகை கொரோனா எனும் செய்தி முற்றிலும் போலியானது! -சுகாதார அதிகாரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு புதிய வகை கொரோனா எனும் செய்தி முற்றிலும் போலியானது! -சுகாதார அதிகாரி


பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் இதுவரை நுழையவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக அதிகாரியொருவர் பிரிட்டனில் இருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவர் புதிய வகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்திகள் போலியானது என சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


பிரிட்டனில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் பின்னர் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் சமூகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.