விபத்துக்குள்ளாகி நிர்க்கதியாக கிடந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபத்துக்குள்ளாகி நிர்க்கதியாக கிடந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி!

விபத்துக்குள்ளாகி கிடந்த மூன்று குழந்தையின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் களுத்துறை - வடக்கு பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் மற்றொரு முச்சக்கர வண்டி அவர் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் சாலை ஓரம் கிடந்த போது, உதவி செய்வது போல் நடித்து, களுத்துறை வடக்கு காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

$ads={2}

பின்னர் அந்த பெண் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் சந்தேக நபரான சாரதி 32 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாடுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (27) தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியால் தட்டுப்பட்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் காயமடைந்த பெண்ணைப் பார்த்து மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தனர். அப்போது அருகிலுள்ள முச்சக்கர வண்டி சாரதி தானாக முன்வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

சந்தேக நபரான சாரதி, அவரை அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார், அங்கு நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால் வீட்டில் தனது சிறு குழந்தைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த பெண் முச்சக்கர வண்டி சாரதியை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், பெண்ணில் கணவர் காத்திருப்பதாக களுத்துறை பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் அழைத்துச் செல்லுமாறு அந்தப் பெண் சாரதிக்கு அறிவுறுத்தியிருந்தார்.

$ads={2}

இருப்பினும், முச்சக்கர வண்டி சாரதி எதிர்த் திசையில் ஓட்டிச் சென்று, அந்த பெண்ணின் கணவருக்கு அவரை நோக்கிச் செல்வதாக அறிவித்திருந்தார்.

அந்த நபர் அந்த பெண்ணை குறுக்கு சாலைகள் வழியாக தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அச்சுறுத்திய பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அவர் அந்தப் பெண்ணின் மொபைல் ஃபோனுடன் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தப் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையை அணுகி சம்பவத்தை விளக்கி கடையில் ஒரு பெண்ணுக்கு தகவல் கொடுத்திருந்தார், அதைத் தொடர்ந்து காயமடைந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

அதன்பிறகு அந்த பெண்ணின் கணவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், பின்னர் அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும் அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பயன்படுத்தி களுத்துறை வடக்கு பொலிஸாரினரால் விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

-எம்.எம். அஹ்மட்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.