உயர்நீதிமன்ற கட்டட தீப்பரவல்; தீக்கான காரணம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்நீதிமன்ற கட்டட தீப்பரவல்; தீக்கான காரணம் வெளியானது!

கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் இதுவரை 70 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளிலேயே இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் பிரதான நிறைவேற்றதிகாரி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டி.எல்.சி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்நீதிமன்ற கட்டட தீப்பரவலில் அங்குள்ள ஆவணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

மேலும், குளிரூட்டிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தீயினாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் இந்த தீ விபத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியன தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் பிரதான நிறைவேற்றதிகாரி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டி.எல்.சி விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.