கொழும்பின் கொரோனா பரவல் தொடர்பில் இராணுவ தளபதியின் விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பின் கொரோனா பரவல் தொடர்பில் இராணுவ தளபதியின் விசேட அறிக்கை!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


$ads={2}

இதேவேளை டிசம்பர் மாதம் இறுதி பகுதிவரை நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரங்கள் பண்டிகைக் காலம் என்பதனால் பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.