இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒரு மரணம் பதிவானது.
அதன்படி, கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவரே இவ்வாறு முல்லேரியாவ ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (10) மரணித்துள்ளார்.
$ads={2}
மேலும் இவர் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றைய நாள் முடிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 762 ஆக பதிவாகியது.