நாட்டில் இன்று மாத்திரம் 655 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,790 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 489 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 23,793 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
$ads={2}
இந்நிலையில், இன்னும் 8,848 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 149 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.