9 கிலோ தங்கம் கடத்திச் செல்ல முட்பட்ட ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

9 கிலோ தங்கம் கடத்திச் செல்ல முட்பட்ட ஐவர் கைது!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 9 கிலோ கிராம் தங்கம் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகில் இருந்த மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த நபரை கடலோர காவல் படையின சோதனை செய்தனர்.


$ads={2}

அப்போது அவரது உடம்பில் மறைத்து வைத்திருந்த சுமார் பல இலட்சம் மதிப்பிலான 9 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவருடன் இருந்த நால்வர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.