கேகாலை தம்மிக்கவின் பாணி அருந்திய 5 வயது சிறுவன் உட்பட ஐவருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேகாலை தம்மிக்கவின் பாணி அருந்திய 5 வயது சிறுவன் உட்பட ஐவருக்கு கொரோனா!


கேகாலை தம்மிக்க பண்டார என்பவரினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட கொரோனாவை அழிக்கும் பாணத்தை பருகிய மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


வரக்காபொலை மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் மற்றும் அவருடைய தாய் உட்பட ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாக வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.


$ads={2}


தாம் அந்த பாணத்தை பருகியதாக தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


குறித்த ஐவரும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வரிசையில் பல மணித்தியாலங்கள் நின்றவர்களுக்கும், செல்பவர்களுக்கும் கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.


$ads={1}


எதிர்வரும் நாட்களில் அந்த பிரதேசங்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


சுகாதார சட்டங்களை மதிக்காமல் போலியான நபர்களின் பின்னால் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.