தமிழ் : நேற்றைய கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம் - கொழும்பில் மட்டும் 526 தொற்றாளர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் : நேற்றைய கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம் - கொழும்பில் மட்டும் 526 தொற்றாளர்கள்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 526 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது .

இதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


$ads={2}

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 978 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் இலங்கையில் இதுவரையில் 142 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.