அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் 20 ஆண்டு சிறை; 20 ஆண்டை கழித்தவர்களுக்கு விடுதலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் 20 ஆண்டு சிறை; 20 ஆண்டை கழித்தவர்களுக்கு விடுதலை!!


அனைத்து மரண தண்டனை கைதிகளின் தண்டனையும் 20 ஆண்டுகளாக குறைக்கப்படும் என சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.


தற்போது சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை காரணம்காட்டி அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, அரசாங்கம் இந்த எண்ணிக்கையை குறைந்தது 8,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதிக்கான அமைச்சர் ஆலோசனைக்குழுவின் தொடக்கக் கூட்டத்தில் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.


 அவர் மேலும் தெரிவிக்கையில்,


தற்போது நாடு முழுவதும் உள்ள 28 சிறைகளில் 28,951 கைதிகள் உள்ளனர் என்பது கணிசமான நெரிசலை ஏற்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன்படி, குறிப்பாக கொரோனா சூழ்நிலையில் மன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


$ads={2}


அதன்படி, நீதி அமைச்சகம் முன்வைத்த விடயத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து கைதிகளின் தண்டனையும் 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.


மேலும் சிறிய அளவிலான பிணைத்தொகையை செலுத்த இயலாமை காரணமாக சிறையில் இருக்கும் கைதிகளின் சார்பாக  அதை செலுத்த அமைச்சகம் பொறுப்பெடுக்கும் என்றும்  அமைச்சர் கூறினார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.