இன்றைய தினம் (16) இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 03 மரணங்கள் பதிவாகின.
1. பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயது பெண். 16ஆம் திகதி அன்று மரணம்.
2. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 50 வயது பெண். 14ஆம் திகதி அன்று மரணம்.
3. கொழும்பு 09 ஐ சேர்ந்த 78 வயது ஆண். 15ஆம் திகதி அன்று மரணம்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர்பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய தினம் தொற்றுக்கு மேலும் புதிதாக 611 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,732 ஆக உயர்ந்துள்ளது.