மியன்மாரில் 100,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மியன்மாரில் 100,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

மியன்மாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சத்து 431பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 68ஆவது நாடாக விளங்கும் மியன்மாரில் இதுவரை மொத்தமாக இரண்டாயிரத்து 132பேர் உயிரிழந்துள்ளனர்.


$ads={2}

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 276பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19ஆயிரத்து 059பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 79ஆயிரத்து 240பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.