நோயாளியின் பரிசோதனை முடிவுகள் அவர் வைரஸ் தொற்றுக்கு உறுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நோயாளி அளித்த தவறான தகவல்களால் அதிகாரிகள் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட எவரும் முதலில் சுய தனிமைப்படுத்தலில் தங்கள் இல்லத்தில் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் தங்கள் பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
மேலும், அத்தகைய கொரொனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வது நல்லதல்ல என்றும் அவர் கூறினார்.