தனியார் வைத்தியசாலையில் PCR செய்த நபருக்கு நேர்ந்த கதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் வைத்தியசாலையில் PCR செய்த நபருக்கு நேர்ந்த கதி!

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் கொரோனா நோயாளர் அல்ல என 19 நாட்களின் பின்னர் தெரியவந்துள்ளது.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என உறுதி செய்யப்பட்ட கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த நபர் இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.


$ads={2}

அங்கு மேற்கொள்ளப்பட்ட 2 PCR பரிசோதனைகளின் அவர் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதியாகியமையினால் 19 நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

அவரை அம்பியுலன்ஸ் வண்டி மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக இந்த நபர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கொரோனா தொற்றாளர் என உறுதியாகியமையினால் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தை 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனியார் வைத்தியசாலை PCR பரிசோதனையின் நம்பகத்தன்மை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய இரண்டாவது முறையான இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை காரணமாக அவர் தனது வெளிநாட்டு தொழிலையும் இழந்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.